More

நடிகர் பிருத்விராஜின் கொரோனா சோதனை முடிவு வெளியானது!

நடிகர் பிருத்விராஜ் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் மாட்டிக்கொண்ட நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தாய்நாடு திரும்பினார்.

Advertising
Advertising

ஆடுஜீவிதம் என்ற படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் 57 பேர் ஜோர்டான் நாட்டில் உள்ள பாலைவனம் ஒன்றில் முகாம் இட்டனர். அப்போது கொரோனா பாதிப்பு அதிகமானதை அடுத்து உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படக்குழுவினர் அனைவரும் ஜோர்டானில் மாட்டிக்கொண்டனர்.

இதையடுத்து இரு மாதங்களுக்குப் பின்னர் இந்திய அரசின் சிறப்பு விமானம் மூலம், அனைவரும் தாய்நாடு திரும்பினர். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இப்போது அந்த சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் நடிகர் பிருத்விராஜுக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. அதை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts