More

அந்த காட்சியில் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது – வடிவேலு


சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் கடந்த 12ம் தேதி அமேசன் பிரைமில் வெளியாகியது. இப்படத்திற்கு தொடக்கம் முதலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

படம் வெளியாகி அத்தனை பேரின் எதிர்பார்ப்புகளையும் நிவர்த்தி செய்துள்ளது. படத்திற்கும், சூர்யாவின் நடிப்பிற்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் மத்தியில் தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. Ott தளத்தில் வெளியாகியும் மாபெரும் சாதனை படைத்த சூரரைப்போற்று கோடி கணக்கில் லாபம் பார்த்துள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது சூரரைப்போற்று படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைகைப்புயல் வடிவேலு,
“தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது‌. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்” என பதிவிட்டு புகழ்ந்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts