சமந்த போட்ட டிவிட்... பதில் டிவிட் போட்ட கணவர்... அப்ப பிரச்சனை என்னாச்சு?...
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜுன்னாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தெலுங்கு சினிமாவின் நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நாக சைதன்யா சமந்தாவை 8 வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் சினிமாவில் கவனத்தை செலுத்தி தொடர் ஹிட் படங்களில் நடித்து வந்தனர்.

சமீபகாலமாக சமந்தாவுக்கும் அவரின் கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இருவரும் விரைவில் பிரியவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. அதை உறுதிப்படுத்தும் படி தனது டிவிட்டர் பக்கத்தில் சமந்தா அக்கினினேனி என்கிற பெயரை வெறும் 'S' என சமந்தா மாற்றினார். மேலும், சமீபத்தில் சமந்தா தன் மாமனார் நாகார்ஜுனாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், நாகார்ஜுனா அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.

மேலும், நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் இணைந்து நடிக்கும் புதிய படமான ‘லவ் ஸ்டோரி’ படத்திற்கு சமந்தா டிவிட்டரில் வாழ்த்து கூறியிருந்தார். ஆனால், சாய் பல்லவியை மட்டும் அவர் டேக் செய்திருந்தார். ஆனலும், இதற்கு ‘நன்றி சாம்’ என நாக சைதன்யா பதில் டிவிட் செய்துள்ளார். ஒருபக்கம் அவர்கள் இருவரைம் நாகார்ஜுனா குடும்பத்தினர் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், இருவரும் பிரிய மாட்டார்கள் எனவும் ஆந்திராவில் செய்திகள் பரவி வருகிறது.