தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு வெள்ளைக்காரர் அஜித் – சொன்ன நடிகை யார் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் ஒரு ரவுண்ட் வந்து கலக்கியவர் நடிகை சரண்யா. இவர் தன்னுடன் பணிபுரிந்த நடிகர்கள் குறித்துப் பேசியுள்ளார்.

By :  adminram
Update: 2020-03-07 11:21 GMT

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் ஒரு ரவுண்ட் வந்து கலக்கியவர் நடிகை சரண்யா. இவர் தன்னுடன் பணிபுரிந்த நடிகர்கள் குறித்துப் பேசியுள்ளார்.

மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை சரண்யா கதாநாயகியாக சோபிக்கவில்லை என்றாலும் தனது குணச்சித்திர நடிப்பால் இரண்டாவது ரவுண்ட்டில் கலக்கினார். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் உள்ள எல்லா ஹீரோக்களும் அம்மாவாக நடித்து பெஸ்ட் அம்மா ஆஃப் கோலிவுட் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தன்னுடன் நடித்த நடிகர்கள் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சரண்யா அஜித்தைப் பற்றி ‘அஜித்தை அழகு சுந்தரன் அவர் செம கெத்தாக, மாஸாக இருப்பார். ஸ்பாட்டில் அவர் வைத்தது சட்டமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அஜித் ஒரு குழந்தை மாதிரிதங்கமான மனிதர். தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு வெள்ளைக்காரர் என்று சொல்லவேண்டும் என்றால் நான் அஜித்தை தான் சொல்லுவேன். அந்த அளவிற்கு அழகானவர் அவர்’ எனத் தெரிவித்துள்ளார்.