சமீபத்தில் புற்றுநோய் சிகிச்சைக்காக ரசிகர்களிடம் பண உதவிக் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சிந்து அங்காடி தெரு மற்றும் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை எனவும் அதற்கான ரசிகர்களிடம் உதவியும் கேட்டிருந்தார். இந்நிலையில் அவர் கொடுத்த நேர்காணல் ஒன்றில் கூறிய கருத்து இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் ’நான்தான் முதலில் ரேணிகுண்டா படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசனுக்கு உதவி செய்தேன். அஜித் செய்தார் என்று சொல்வதெல்லாம் பொய். இது போல அஜித் நிறைய உதவிகள் செய்தார் என இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.’ எனக் கூறியுள்ளார். தீப்பெட்டி கணேசன் அஜித்துடன் பில்லா 2 படத்தில் நடித்திருந்தார். அவர் கொரோனாவால் வேலை இழந்திருந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக ஒரு வீடியோ வெளியிட அவருக்கு அஜித் உதவி செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அதை இப்போது சிந்து மறுத்திருப்பது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில்…
இளையராஜாவைப் பற்றியும்…
தரணி இயக்கத்தில்…
பிக் பாஸ்…
மலையாளத்தில் இந்த…