அஜித் வீட்டில் சோதனை, நடந்தது என்ன? வனச்சரகர் பேட்டி
நடிகர் அஜித் வீட்டிலும் அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா வீட்டிலும் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக வெளியான செய்தி குறித்து வனத்துறை சரகர் மோகன் என்பவர் பேட்டி அளித்துள்ளார்
சில மணி நேரங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்கள் மற்றும் ஒரு சில இணையதளங்களில் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, மலைப்பாம்பு ஒன்றை வளர்ப்பதாகவும் இது குறித்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடந்ததாகவும், அதன் பின்னர் அவரது வீட்டில் எந்த வித மலைப்பாம்பும் கிடைக்காததை அடுத்து அஜித்தின் பழைய வீட்டில் சோதனை நடந்ததாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை சுரேஷ் சந்திரா ஏற்கனவே மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அஜீத் வீட்டில் சோதனை நடந்ததாக வெளியாகியுள்ள செய்தி குறித்து சென்னை வனச்சரகர் மோகன் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அஜித் வீட்டியோ அல்லது அவருடைய உதவியாளர் சுரேஷ் சந்திரா வீட்டிலோ சோதனை நடைபெறவில்லை என்றும் சுரேஷ் சந்திரா வீட்டில் மலைப்பாம்பு வளர்க்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி குறித்து இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும், இதுகுறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து அஜித் வீட்டிலும் அவருடைய மேனேஜர் வீட்டிலும் வன அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வெளிவந்த செய்திகள் முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது
நேற்று முன்தினம் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி திடீரென மாயமாகி விட்டதாக ஒரு வதந்தி வெளியானதை அடுத்து அவரது மகள் பல்லவி ஃபேஸ்புக்கில் வீடியோவை வெளியிட்டு ’நான் காணாமல் போகவில்லை என்றும் வீட்டில் பத்திரமாக தான் இருக்கிறேன் என்றும் கூறியது அனைவரும் அறிந்ததே