கொரோனா பாதிப்பு தொடர்பாக ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் 500 பேருக்கு மேல் பாதித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் எனவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வரவேண்டும் எனவும், கூட்டமாக கூடாமல் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுகொண்டார். எனவே,பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். இதில், 11, 12 வகுப்புகளுக்கு மட்டுமே தேர்வுகள் நடைபெற்றது. எனவே, மற்ற வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறுமா என்கிற குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது.
விஜய் ரசிகர்கள்…
Simbu: சிம்புவின்…
விஜய் டிவி…
பத்திரிக்கையாளராக இருந்து…
தமிழ் சினிமாவில்…