எல்லா புகழும் அஜித்துக்கே - ரங்கராஜ் பாண்டே டிவிட்
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்ததற்காக பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே விருது பெற்றுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எதிரே இருப்பவர்களை மடக்கி, மடக்கி கேள்விகளால் துளைத்தெடுத்து அவர்களிடமிருந்தை பதிலை பெற்று புகழடைந்தவர் ரங்கராஜ் பாண்டே.
வினோத் இயக்கத்தில் நேர்க்கொண்ட பார்வை படத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக எதிர்தரப்பு வழக்கறிஞராக அவர் நடித்திருந்தார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து எல்லாப் புகழும் வினோத் மற்றும் அஜித்துக்கே என டிவிட் செய்துள்ளார்.
13ஆவது ஆண்டாக நடந்த #edision_awards
இல், 2019ஆம் ஆண்டின் Best villain - Critics Award #நேர்கொண்டபார்வை படத்துக்காக வழங்கப்பட்டது. 2020இல் வாங்கிய முதல் விருது. திரைத்துறையில் முதல் விருதும் கூட. எல்லா புகழும் #HVinoth மற்றும் #Ajith க்கே... இன்னும் உழைப்பேன் pic.twitter.com/ey34jL3B7G— Rangaraj Pandey (@RangarajPandeyR) January 13, 2020