More

ஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான்…மீண்டும் கேட்பார்…. ரஜினியை கிண்டலடித்த உதயநிதி

துக்ளக் விழாவில் பெரியார் பற்றி ரஜினி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1971ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமன் மற்றும் சீதை சிலையை திகவினர் செருப்பால் அடித்து அசிங்கப்படுத்தியதாகவும், அதை துக்ளக் பத்திரிகையில் சோ எழுதியதாகவும் ரஜினி பேசியிருந்தார். ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை எனவும், ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திகவினர் கூறினார். ஆனால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என ரஜினி தெரிவித்து விட்டார்.

Advertising
Advertising

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ‘உண்மை தெரியாமல் பேசும் ரஜினி தெரிந்த பின்பு மன்னிப்பு கேட்பார். காவிரி விவகாரத்தில் கூட பேசிவிட்டு பின் மன்னிப்பு கேட்டவர்தான்’ என கிண்டலாக தெரிவித்தார்.

Published by
adminram

Recent Posts