நான் அழகாக இல்லையா?.. வாய்ப்பு கொடுங்கள்! மேடையில் கதறி அழுத நடிகை...

06d02a7886977c0313f6f157ca48ff33

2012ம் ஆண்டு வெளியான ‘லவ்லி’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் ஷான்வி ஸ்ரீவத்சவா. அதன்பின் ஒரு சில தெலுங்கு அவர் நடித்தார். அதன்பின் சில வருடங்கள் வாய்ப்புகள் இல்லாமல் கடந்த சில வருடங்களாகவே கன்னட சினிமாவில் நடிக்க துவங்கினார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ‘அத்தடே ஸ்ரீமன் நாராயணா’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர்: ‘ரவுடி’ திரைப்படத்திக்கு பின் தெலுங்கில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தினமும் அழுதிருக்கிறேன். நான் எங்கோ தவறு செய்துவிட்டேன் என நினைப்பேன்.

அதனாலேயே ஐதராபாத் வருவதையே தவிர்த்தே. இப்போது மீண்டும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் சிறியவளாக இருக்கலாம். பார்ப்பதற்கு அழகாக இல்லாமல் இருக்கலாம். எனக்கு ஆதரவு கொடுங்கள்’ என கண்ணீர் மல்க பேசினார். அவருக்கு பத்திரிக்கையாளர்களும், படக்குழுவினரும் ஆறுதல் கூறினார்கள்.

 

Related Articles

Next Story