Categories: latest news

அமரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழா! முக்கியமானவங்களுக்கு அழைப்பு இல்லையே

பிளாக்பஸ்டர் அமரன்: கடந்த வருடம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருப்பார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவானது. இந்த படத்திற்கு பிறகு முகுந்த் மற்றும் இந்து ரபேக்கா வர்கீஸ் போன்ற பெயர்கள் மக்கள் மனதில் என்றும் அழியாத பெயர்களாக மாறிவிட்டன.

பரிதவிப்பு, ஏக்கம்: அந்த அளவுக்கு இருவரின் காதல், இந்த நாட்டிற்காக மேஜர் முகுந்த் வரதராஜன் செய்த தியாகம் என பார்ப்போரை கண் கலங்க வைத்தது. ஒரு சாதாரண ராணுவ வீரரின் குடும்பம் தன் பிள்ளையை ராணுவத்திற்கு அனுப்பிவிட்டு பெற்றோர்கள் வெளிப்படுத்தும் ஏக்கம் ,மனைவியின் பரிதவிப்பு என அனைத்தையும் இந்த படத்தில் அழகாக காட்டியிருப்பார் ராஜ்குமார் பெரியசாமி.

சாய்பல்லவியின் நடிப்பு: இதில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனின் நடிப்பும் இந்த படத்திற்காக அவர் மெனக்கிட்ட விதமும் எடுத்த உழைப்பும் படம் பார்க்கும் பொழுதே நன்றாக தெரிகிறது. பாடி பிட்னஸ் என்ற வகையிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இன்னொரு பக்கம் சாய்பல்லவி அவரின் நடிப்புதான் இந்த படத்தின் கதை போக்கையே மாற்றியது என்று சொல்லலாம்.

100வது நாள்; எந்தெந்த இடத்தில் எமோஷன் காட்ட வேண்டும் எப்படி காட்ட வேண்டும் எந்த இடத்தில் எமோஷனை அடக்க வேண்டும் என ஒவ்வொரு சீனிலும் சாய் பல்லவி அசத்தியிருப்பார் .படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. 100 நாட்களைக் கடந்தும் படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா இன்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடந்து வருகிறது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் கமல். அதனால் இந்த விழாவிற்கு கமல் உட்பட படக்குழு அத்தனை பேரும் வந்திருக்கின்றனர். இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இந்த விழாவிற்கு பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதுதான். அமரன் திரைப்படம் வெளியாகி அதை மக்களிடையே நல்ல முறையில் சேர்த்ததற்கு பத்திரிக்கையாளர்களும் ஒரு காரணம்.

ஆனால் இந்த நூறாவது நாள் விழாவிற்கு அவர்களுக்கே அழைப்பு இல்லை எனும் போது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்திருக்கின்றனர். கமலை பொருத்தவரைக்கும் அவர் எத்தனை உயரங்களுக்கு சென்றாலும் இதுவரை பத்திரிக்கையாளர்களை என்றுமே மறந்ததில்லை. ஆனால் இந்த விழாவிற்கு மட்டும் ஏன் அழைப்பு கொடுக்கவில்லை என்பதுதான் அனைவரின் கேள்வியாக பார்க்கப்படுகிறது.

ராம் சுதன்

Recent Posts

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

1 hour ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

4 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

17 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

17 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

18 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

19 hours ago