More

சற்றுமுன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் அமிதாப் பச்சன்!

தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராதனா என ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 பேருக்கு கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர்களது குடுப்பதில் அனைவரும் குணமடைந்து மீண்டு வர ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு யாகம் செய்தனர்.

Advertising
Advertising

ரசிகர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி நடிகை ஐஸ்வர்யாராய் மற்றும் மகள் ஆராத்யா இருவரும் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு நேற்று வீடு திரும்பினர். அதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி அமிதாப்பச்சன் அவர்களும் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாக ரசிகர்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதுகுறித்து நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் உறுதி செய்ததோடு தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அபிஷேக் பச்சன் இன்னும் கொரோனாவில் இருந்து குணமாகவில்லை என்றும் அவர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts