More

பழச்சாறில் மயக்க மருந்து– சினிமா பாணியில் வன்புணர்வு செய்த பிரபல நடிகரின் மகன் !

தமிழ் சினிமாவின் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகர் சூர்யகாந்த். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல படங்களில் நடித்து வரும் இவர் கடைசியாக வடசென்னை படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்திருந்தார். இவர் தற்போது சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார்.

Advertising
Advertising

இவரது மகனான விஜய் ஹரிஸ் என்பவரும் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் தற்போதுநாங்களும் நல்லவங்க தான்என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு பெண்ணை பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து வன்புணர்வு செய்ததாக இவர் மேல் புகார் எழ அவரை அண்ணாநகர் போலிஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. பிரபல நடிகரின் மகன் ஒருவர் இப்படி செய்துள்ளது தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts