பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அது யார் என்பது தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது ஆரி, ரியோ, சோம் ஆஜித், அனிதா, ரம்யா, ஷிவானி, கேப்ரியல்லா ஆகியோர் மட்டுமே உள்ளனர். இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்ட்டில் அனிதா, ஆரி, கேப்ரியல்லா, ஷிவானி, ஆஜித் ஆகியோர் உள்ளனர்.
இவர்களில் அனிதா வெளியேறுவது உறுதியாகியுள்ளது. அனிதாவின் டிவிட்டர் பக்கத்தில் ‘எல்லாவற்றுக்கும் நன்றி’ என டிவிட் செய்யப்பட்டுள்ளது. இதை அவரின் கணவர்தான் டிவிட் செய்திருக்க வேண்டும் என்பதால் அனிதா வெளியேறுவது தெரிந்தே அவர் இப்படி டிவிட் செய்துள்ளார் என நம்பப்படுகிறது.
அனிதாவின் பேச்சு பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, அந்நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கும் பிடிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் வள வள வென சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார். அதிகமாக கோபப்படுகிறார். குறிப்பாக ஆரியிடம் அவர் நடந்து கொள்வது யாருக்கும் பிடிக்கவில்லை. எனவே, அவரை வெளியேற்ற வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பல படங்களில்…
சுந்தர் சி…
Actress Devayani:…
சூர்யாவின் கங்குவா…
பிரேமம் படத்தின்…