More

தமிழகத்தில் திறக்கப்படுகிறதா தியேட்டர்கள்? அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள சொல்லி அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertising
Advertising

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பதே தெரியாத நிலை இருந்தது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அதிக வருவாய் இழப்பை சந்தித்தனர். இந்நிலையில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

இதுபற்றி திருப்பூர் சுப்ரமண்யன் தெரிவித்துள்ள செய்தியில் ‘தியேட்டர்களை திறப்பதற்கான ஆயத்த வேலைகளில் இறங்க அரசு தியேட்டர் உரிமையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.’ எனக் கூறியுள்ளார். இதனால் கூடிய விரைவில் திரையரங்கங்கள் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Published by
adminram

Recent Posts