Categories: latest news

விஷாலுக்காக ஓடி வந்த ஆர்யா.. நண்பனுக்கு ஒன்னுனா சும்மா இருப்பாரா?

விஷாலின் உடல்நலம்:இப்போது சோஷியல் மீடியாக்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி விஷாலின் உடல்நலம் குறித்து தான். 12 வருடங்களுக்குப் பிறகு அவர் நடிப்பில் மத கஜ ராஜா திரைப்படம் வெளியாக இருக்கின்றது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம் அஞ்சலி வரலட்சுமி ஆகியோர் நடிக்கும் இந்த திரைப்படம் ஒரு ஃபுல் காமெடி என்டர்டெயிண்ட் திரைப்படமாக வெளிவர இருக்கின்றது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படி ஒரு நிலைமையா?: 12 வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் இக்காலத்துக்கும் ஏற்ற திரைப்படமாகவே இந்த படம் இருக்கின்றது என கூறி இருக்கிறார்கள். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது விஷால் இந்த விழாவிற்கு வருகை தந்தார். அப்போது அவரைப் பார்த்த அனைவருமே அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

என்ன காரணம்?: கை நடுக்கத்துடன் சிறிது தள்ளாடியபடியே நடந்து வந்தார் விஷால். திடீரென என்ன ஆயிற்று விஷாலுக்கு என அனைவருமே கேள்வி எழுப்ப தொடங்கினர். அப்போது தொகுப்பாளினி டிடி அவருக்கு காய்ச்சல் இருப்பதால் அவரால் பேச முடியவில்லை என நிலைமையை சமாளித்தார். ஆனால் இதற்கு முழு காரணம் பாலா தான் என கூறப்பட்டது. அவன் இவன் படத்தில் வித்தியாசமான கேரக்டர் நடித்திருப்பார் விஷால். படம் முழுக்க தன்னுடைய கண்ணை கோணலாக வைத்துக் கொண்டு நடித்ததன் விளைவுதான் இந்த அளவு அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என தெரிய வந்திருக்கிறது.

நண்பர்கள் எடுத்த முடிவு: அந்த படத்தில் இருந்து தீராத தலைவலியாய் அவதியுற்று வந்தார் விஷால் என்றும் அது இன்று வரை அவருக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தி வருவதாகவும் அவருடைய நண்பர்கள் கூறினார்கள். இந்த நிலையில் கூடிய சீக்கிரமே விஷால் அவருடைய பழைய நிலைமைக்கு திரும்புவார் என ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதற்கு காரணம் அவருடைய நெருங்கிய நண்பர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஆர்யாவின் அக்கறை:அதிலும் குறிப்பாக இவருடைய நிலைமையை அறிந்து மும்பையில் இருந்த ஆர்யா சென்னைக்கு வந்து விட்டாராம். உடனே வீட்டிலிருந்த விஷாலையும் வெளியே அழைத்து ஆர்யாவின் ஹோட்டலில் தங்க வைத்து இனிமேல் விஷால் உடல் நலம் பூரண குணமடையும் வரை அவர் உடனையே ஆர்யா மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் இருக்கப் போவதாகவும் கூறி இருக்கிறார்கள்.

vishal

எப்படியாவது விஷாலை திரும்ப பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் ஆர்யா இப்போது இறங்கி இருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லும் பட்சத்தில் விஷாலின் நிலைமை ஏன் முன்பு ஆரியாவுக்கு தெரியாதா? இப்போது திடீரென ஏன் இந்த அக்கறை என்றெல்லாம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ராம் சுதன்

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

4 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

5 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

5 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

5 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

8 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

10 hours ago