More

அடப்பாவீங்களா! ஆஸ்கர் வாங்கிய வேண்டிய படத்த! – திரௌபதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

குறிப்பாக, குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பெண்களை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த வாலிபர்கள் காதல் என்கிற பெயரில் ஏமாற்றி வாழ்க்கையை பாழ் செய்வதுவிடுகின்றனர் என்கிற கருத்து இப்படத்தில் கையாளப்பட்டுள்ளது. எனவே, சில சமூகத்தை சேர்ந்த பிரிவினர் இப்படத்தை ஆதரித்தும், சிலர் அதை எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், ஆனந்த விகடன் வார இதழ திரௌபதி படத்திற்கு வெறும் 29 மதிப்பெண் மட்டுமே அளித்துள்ளது. திரைத்துறையை பொறுத்தவரை விகடன் எத்தனை மதிப்பெண் கொடுக்கிறது என்பது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. அதிக மதிப்பெண்கள் கொடுத்தால் அதையே விளம்பரமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஆனால், 29 மதிப்பெண் மட்டுமே அளித்து படத்தை கடுமையாக விமர்சித்துள்ளது.

இதனால் கோபமடைந்த இயக்குனர் மோகன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘விகடன் மட்டுமல்ல.. பல இடங்களில் முகமுடி கொண்ட மனிதர்கள் தான்.. இவர்களை இடது கையால் ஓரம்கட்டி விட்டு வலது கையால் அடுத்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுத போறேன்.. புட்டிபால் பசங்க..’ என விமர்சித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ‘படுபாவிங்களா.. ஆஸ்கர் அவார்ட் வாங்க போற படத்தை ! இப்படி 29 மார்க் கொடுத்து கெடுத்து விட்டுட்டீங்களடா..’ என பருத்திவீரன் கார்த்தி புகைப்படத்தை போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts