என்கவுண்டர் செய்யப்பட்ட குற்றவாளிகளின் உடல்கள் மீண்டும் பிரேதப் பரிசோதனை - நீதிமன்றம் உத்தரவு

19e94c8e5f3a792e391a483b2d0ee9b0

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கொலை குற்றவாளிகளின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்காவை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை போலீசார் என்கவுண்டர் செய்து சுட்டுக் கொன்றனர். சம்பவம் நாடு முழுவதும் விவாதங்களை எழுப்ப தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க தொடங்கியது.

குற்றவாளிகளின் உடல்களை அடக்கம் செய்யாமல் பாதுகாத்து வைக்குமாறு நீதிமன்றம் தெலுங்கானா அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் குற்றவாளிகள் 4 பேரின் உடல்களையும் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது மறு பிரேத பரிசோதனை அறிக்கைகள் 23ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

Related Articles

Next Story