குற்றப்பரம்பரை எனும் கதையைப் படமாக்குவது தொடர்பாக இயக்குனர் பாலா மற்றும் பாரதிராஜா ஆகிய இருவருக்கும் இடையில் எழுந்த பிரச்சனை இப்போது முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் பாரதிராஜாவின் 79 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது அவருக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கவேண்டும் என தமிழ் சினிமாவில் தேசிய விருது வாங்கிய கலைஞர்கள் ஒரு கையெழுத்து இயக்கத்தை உருவாக்கியுள்ளனர். அதில் அனைவரும் ஆச்சர்யப படத்தக்கவகையில் இயக்குனர் பாலாவின் கையெழுத்தும் இருந்தது.
ஏனென்றால் குற்றப்பரம்பரை என்ற கதையை படமாக்குவது தொடர்பாக இரு தரப்புக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையான வார்த்தைப் போர் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டு பேருமே இப்போது அந்த படத்தை தொடங்க முடியாத நிலையில் இருவருமே சமாதானமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில்…
விஜயை வைத்து…
Ajith: ஒரு…
Dada: நடிகர்…
Rajinikanth: தமிழ்…