நியுசிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு – மீண்டும் தோனியை கைவிட்ட பிசிசிஐ !

5cd2367fa46c72f260fcab2f08bd0dd3

நியுசிலாந்து அணிக்கெதிரான தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டி 20 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் வரும் இம்மாதம் 24 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக காயம் காரணமாக அவதிப்படும் ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்குமார் மற்றும் ஷர்துள் தாகூர் ஆகியோர் இடம்பெறவில்லை. ஹர்திக் பாண்ட்யா முதுகுத்தண்டு காயத்தால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி :-

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, குலதீப் யாதவ், யஷ்வேந்தர சஹால், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமத் ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா.

இந்திய அணியில் மூன்று தொடக்க ஆட்டக்காரர்கள் இருப்பதும் மாற்று விக்கெட் கீப்பர் இல்லாமல் இருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பார்த்த படியே தோனி அணியில் சேர்க்கப்படாததும் அவரது ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.

 

Related Articles

Next Story