More

ஆள வுடுங்கடா சாமி.. அட்லியால பட்டதே போதும் … அதிரடி முடிவெடுத்த பிகில் தயாரிப்பாளர்….

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அட்லீ ஷங்கரை போலவே ஆக ஆசைப்பட்டு அவரப்போலவே பல கோடிகளில் திரைப்படங்களை இயக்கி தயாரிப்பாளர்களுக்கு நஷ்டங்களை ஏற்படுத்தி வரும் இயக்குனர் என்பது திரைத்துறையில் எல்லோருக்கும் தெரியும். அதாவது கூறிய பட்ஜெட்டை விட அதிகமாக செலவை இழுத்துவிட்டு தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார். 

அவர் இயக்கிய மெர்சல் திரைப்படம் வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களுக்கு லாபம் என்றாலும் தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம். அதில் விழுந்த தயாரிப்பாளர் முரளி தற்போது வரை திரைப்படம் எடுக்க முடியாமல் திணறி வருகிறார். மீண்டும் விஜயிடம் கால்ஷூட் கேட்டு காத்திருக்கிறார். 

அதை கதைதான் பிகில் படத்திலும் நடந்தது. இப்படம் திரையரங்க அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு லாபம். ஆனால், தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம். அதற்கு காரணம் சொன்ன பட்ஜெட்டை விட அதிக கோடிகள் செலவை அட்லீ இழுத்துவிட்டதுதான் காரணம். எனவேதான், அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் தயங்குகின்றனர்.

இந்நிலையில், பிகில் படத்தில் நஷ்டம் அடைந்த ஏஜிஎஸ் நிறுவனம் இனிமேல் பட்ஜெட் படங்களை, அதாவது குறைந்த செலவில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தயாரிப்போம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாம். அதற்காக 4 இயக்குனர்களிடம் கதை கேட்டு விரைவில் துவங்கவுள்ளனர். 

அதிக கோடிகள் முதலீடு செய்து குறைந்த லாபம் அல்லது நஷ்டத்தை சந்திப்பதை விட, ரூ.10 கோடி பட்ஜெட்டிற்குள் திரைப்படங்களை தயாரித்து லாபம் அடையலாம் என்கிற முடிவுக்கு ஏஜிஎஸ் நிறுவனம் வந்துவிட்டதாம்.. 

எப்படியோ நல்ல கதைகளை வைத்துக்கொண்டு  இயக்குனராக முயற்சி செய்பவர்களுக்கு வாழ்க்கை கிடைத்தால் சரி….
 

Published by
adminram

Recent Posts