‘போடா டேய்’ உன்னைத்தான் சொல்றேன்: அஜித் ரசிகருக்கு கஸ்தூரியின் ஆவேச பதில்

8651740db225fe84fb173b0b12ebcbd8-1

கடந்த ஒரு வாரமாக ரஜினிகாந்த்-பெரியார் விவகாரம் ஒரு பக்கம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நடிகை கஸ்தூரி மற்றும் அஜித் ரசிகர்கள் பிரச்சனையும் இன்னொரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கஸ்தூரியை ஆபாசமாக சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் அவர்களுக்கு கஸ்தூரியும் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறார்

இந்த நிலையில் இன்று ஒரு அஜித் ரசிகர் கஸ்தூரியின் டுவீட்டரில் கூறியபோது, ‘எவனோ ஃபேக் ஐடி பண்ணத்துக்கு எல்லாம் அஜித் ரசிகர்களையும் சொல்லிட்டு இருக்கியா, இங்க பாரு உனக்கு பப்ளிசி9ட்டி தேவைன்னா அதுக்கு வேற எங்கயோ போய் தொல, இங்க எங்கள வம்பு இழுத்துட்டு இருக்காத சரியா’ என்று கூறியுள்ளார்.

இந்த ரசிகருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை கஸ்தூரி, ‘போடா டேய், இப்ப உன்னைத்தான் சொல்றேன்’ என்று கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த பதிலடிக்கு அஜித் ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆபாச கருத்துக்களை பதிவிட்ட 10 பேரின் பெயர் பட்டியலை இன்றே தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளதால் அந்த பத்து பேரில் அஜித் ரசிகர்கள் யாரும் சிக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Related Articles
Next Story
Share it