More

தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு சோதனை – தொலைபேசி அழைப்பால் பரபரப்பு !

சென்னையில் உள்ள தமிழக தலைமைச் செயலத்தில் இன்று காலை வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Advertising
Advertising

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வந்த மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்றில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் தலைமைச் செயலகத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் முதல்வர், துணை முதல்வர் வீடுகள் முழுவதும் சோதனை நடத்தினர். அதையடுத்து இன்று காலை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுனர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. மர்ம அழைப்பு கோவையில் இருந்து வந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதனால் தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Published by
adminram

Recent Posts