டிவிட்டர் பதிவை ரீடிவிட் செய்தால் ரூ.6.5 லட்சம் - வாரி வழங்கிய தொழிலதிபர்
ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், ஆன்லைன் நிறுவனத்தின் சி.இ.ஓ.வுமான யூசகு கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதில், ஜனவரி 1ம், தேதி தான் பதிவிடும் டிவிட்டை ரீடிவிட் செய்பவர்களில் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.6.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதற்கான காரணத்தை யுடியூப் வீடியோ மூலம் தெரிவிக்கிறேன் எனவும் அவர் கூறியிருந்தார். அவரின் டிவிட்டை 41 லட்சம் பேர் ரீடிவிட் செய்திருந்தனர். அதில் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.6.5 லட்சத்தை அவர் வழங்கினார்.
யூசகு ஜப்பானின் பிரபல பேஷன் ஆன்லைன் நிறுவனமான ஜோஜோடவுனின் சி.இ.ஓ.வாக இருக்கிறார். நிலாவுக்கு டிரிப் கூட்டிக்கொண்டு செல்லும் தனியார் நிறுவனத்திடம் பல கோடிகள் கொடுத்து முன் பதிவு செய்துள்ளார். அதேபோல், பல கலைநய பொருட்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் ர கார்கலை அதிக விலை கொடுத்து வாங்கி உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
謹賀新年
【総額10億円】#前澤お年玉 100万円を1000人にプレゼントします!
100万円で皆さまの人生がよりハッピーになりますように。
応募方法は僕のフォローとこのツイートのリツイート。締切は1月7日23:59まで。
企画趣旨や当選条件などはYouTubeで説明してます。 https://t.co/kBgwwmJoaP pic.twitter.com/1Fr0Vq4i6Z
— Yusaku Maezawa (MZ) 前澤友作 (@yousuck2020) December 31, 2019