டிவிட்டர் பதிவை ரீடிவிட் செய்தால் ரூ.6.5 லட்சம் – வாரி வழங்கிய தொழிலதிபர்

அதில், ஜனவரி 1ம், தேதி தான் பதிவிடும் டிவிட்டை ரீடிவிட் செய்பவர்களில் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.6.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதற்கான காரணத்தை யுடியூப் வீடியோ மூலம் தெரிவிக்கிறேன் எனவும் அவர் கூறியிருந்தார். அவரின் டிவிட்டை 41 லட்சம் பேர் ரீடிவிட் செய்திருந்தனர். அதில் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.6.5 லட்சத்தை அவர் வழங்கினார்.

யூசகு ஜப்பானின் பிரபல பேஷன் ஆன்லைன் நிறுவனமான ஜோஜோடவுனின் சி.இ.ஓ.வாக இருக்கிறார். நிலாவுக்கு டிரிப் கூட்டிக்கொண்டு செல்லும் தனியார் நிறுவனத்திடம் பல கோடிகள் கொடுத்து முன் பதிவு செய்துள்ளார். அதேபோல், பல கலைநய பொருட்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் ர கார்கலை அதிக விலை கொடுத்து வாங்கி உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram