நடிகை மீரா துன் ஆரம்பம் முதலே சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார். கடந்த சில நாட்களாகவே நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை ஆபாசமாக திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்த்தார்.
அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் பதிலுக்கு ஆபாச அர்ச்சனைகளை தர ரத்தக்களரி ஆனது சமூகவலைதளம். அதைக் காண சகியாத பாரதிராஜா, விவேக் போன்ற மூத்த கலைஞர்களே அறிக்கை விட்டு இரு தரப்பையும் கண்டித்தனர். இருந்தும் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டாமல் தொடர்ந்து மீரா எதையாவது சர்ச்சையாக பேசி வருகிறார்.
இந்நிலையில் மீரா மிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் வீடியோவில், மலையாளிகளை கொச்சையாக பேசி அவர்களுக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தொடப்புழாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீரா மிதுன் மீது தொடரப்பட்ட FIR நகலை ஷேர் செய்து மீராவை அனைவரும் வழக்கம் போலவே விமர்சிக்க துவங்கியுள்ளனர்.
உத்தமவில்லன் படத்திற்கான…
அரண்மனை 4…
விஜய் ரசிகர்கள்…
Simbu: சிம்புவின்…
விஜய் டிவி…