சென்னை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் : நேரில் சென்ற கமல்ஹாசன்

92dae4e2af1c1c35d60ba98af3ca2fb4

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடித்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில், டெல்லி மாணவர்களுக்கும் ஆதரவு தெரிவித்தும், இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 2வது நாளாக அவரின் போராட்டம் தொடர்வதால், அதை முடக்குவதற்காக பல்கலைக்கழகத்தில் செயல்பட்ட உணவகங்கள் மூடப்பட்டது.

b26c6f46c049f74dd86cd4e025802791

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், எனக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. நான் இறக்கும் வரை, எனை ஒரு மாணவன் என்றுதான் அழைத்துக் கொள்வேன். மாணவர்களின் பாதுகாவலனாக அவர்களின் குரலாக நான் இங்கு வந்துள்ளேன் எனவும், படிக்கும் இடத்திலேயே மாணவர்களை அகதியாக்கியுள்ளது மத்திய அரசு. குடியுரிமை சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 

Related Articles

Next Story