">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பாகிஸ்தானில் ஜனாதிபதி அளவுக்கு பாதுகாப்பு கிடைக்கும் – கிறிஸ் கெய்ல் கருத்து !
பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட பல நாட்டு வாரியங்களும் வீரர்களும் அஞ்சும் நிலையில் கிறிஸ் கெய்ல் அங்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட பல நாட்டு வாரியங்களும் வீரர்களும் அஞ்சும் நிலையில் கிறிஸ் கெய்ல் அங்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
யூனிவர்ஸல் பாஸ் கிறிஸ் கெய்ல் தற்போது வங்கதேச பிரிமியர் லீக்கில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அங்கு நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவரிடம் பாகிஸ்தானில் வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு ‘இன்றைய தேதிக்கு உலகளவில் பாகிஸ்தான் மிகவும் பாதுகாப்பான நாடுதான்.வீரர்களுக்கு பாகிஸ்தானில் ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பு உங்களுக்கும் கிடைக்கும். அதுபோல வங்கதேசத்திலும் நல்ல பாதுகாப்பு அளிக்கின்றனர்.’ எனக் கூறினார். 2009 ஆம் ஆண்டு இலங்கை வீரர்கள் மேல் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து அங்கு சென்று விளையாட வாரியங்களும் வீரர்களும் மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக தேசிய அணியில் விளையாடாமல் லீக் மற்றும் பிக்பாஷ் போன்ற 20-20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வரும் கெய்ல் 45 வரை தான் கிரிக்கெட் விளையாடுவேன் என அறிவித்துள்ளார்.