பவன் கல்யாணுடன் தொடர்பா... கொதிக்கும் சோசியல் மீடியா பிரபலம்

by adminram |

a3f4e52076f627900d53b75c41d64ead

தெலுங்கின் முன்னணி நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணுக்கு ஆந்திரா, தெலங்கானாவில் மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. அந்த வகையில் தெலுங்கு பேசும் நெட்டிசன்களிடையே பிரபலமானவர் அன்ஷூ ரெட்டி. தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 ஷோவிலும் கலந்துகொண்டு பாப்புலரானவர்.

பவன் கல்யாணின் தீவிர ரசிகையான இவரையும் பவன் கல்யாணையும் இணைத்து கடந்த 2018ம் ஆண்டு செய்திகள் வெளியாயின. பவன் கல்யாண் பெயரை டாட்டூவாகக் குத்தியிருப்பதால் அவருடன் தொடர்பு இருக்கிறது என்று அர்த்தமா என அப்போதே பதிலடி கொடுத்திருந்தார் அன்ஷூ.

இவர் சமீபத்தில் பவன் கல்யாணை சந்தித்துப் பேசியிருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாவில், "என்னுடைய கடவுளை மீண்டும் சந்தித்தேன். என்னை நினைவிருப்பதாகவும் என்னுடைய டாட்டூவையும் நினைவிருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார். எனக்கு அவர் டீ கொடுத்து உபசரித்தார். இரண்டு மணி நேர அளவுக்கு அவருடன் உரையாடினேன். கிளம்பும்போது கடிதம் மூலம் எனக்குப் பாராட்டுத் தெரிவித்தார். என்றுமே நீங்கள்தான் எனது முதல் காதல்’’ என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து தெலுங்கு மீடியா, யூடியூப் சேனல்கள் போன்றவை பவன் கல்யாணுடன் அன்ஷூவுக்குத் தொடர்பு இருப்பதாக செய்திகளைப் பறக்கவிட்டன. இதனால், கொதித்துப்போன அன்ஷூ, உண்மை இல்லாத பொய்யான செய்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எக்கச்சக்க கோபத்தில் கொந்தளித்திருக்கிறார்.

Next Story