More

மீண்டும் சென்னை வீரருக்கு கொரோனா… அதிர்ச்சி தகவல்!

சென்னை அணியின் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

கொரோனாவால் தாமதமான 2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி துபாயில் தொடங்க உள்ள நிலையில் சென்னை அணியில் 13 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் அணியின் வீரர்களான தீபக் சஹார் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரும் அடக்கம்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர். இரண்டு சோதனைகளிலும் தீபக் சஹாருக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்ததால் அவர் அணியினரோடு சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் கெய்க்வாட்டுக்கோ இரண்டாவது சோதனையில் மீண்டும் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளதால், அவர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த செய்தி சி எஸ் கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts