More

இந்தியாவில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

சீனாவில் கடந்த அண்டு டிசம்பர் மாதம் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது 25 நாடுகளில் பரவியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலால் 3000 பேர் இறந்துள்ளனர். 80,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

இந்நிலையில், இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. வெளிநாடுகளுக்கு சென்று இந்தியா திரும்பும் பயணிகளால் இந்த வைரஸ் பரவி வருகிறது. ஏற்கனவே 30 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட்டது. அதன்பின் படிப்படியாக உயர்ந்து மொத்தம் 39 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

தற்போது மேலும் 3 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 பேராக உயர்ந்துள்ளது.

Published by
adminram

Recent Posts