சைபராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளிகளை என்கவுண்ட்டர் செய்த போலிஸார் கோயிலுக்கு சென்று பாவ பரிகார பூஜை செய்து வருகின்றனர்.
ஹைதராபாத் பெண் மருத்துவர் பிரியங்கா பாலியல் வல்லுறவு செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சிக்கிய 4 குற்றவாளிகளை சைரதாபாத் போலிஸ் என்கவுண்ட்டர் செய்து சுட்டுக் கொன்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழ, வழக்கை விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்துள்ளது.
மேலும் கொலையாளிகளின் உடல்களை பாதுகாப்ப வைக்க நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த என்கவுண்ட்டரில் ஈடுபட்ட சைபராபாத் காவல் ஆணையர் விஸ்வநாத் சென்னப்பா சஜ்ஜனார் தனது குலதெய்வ கோயிலுக்கு சென்று பாவ பரிகார பூஜைகள் செய்து வழிபாடு செய்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…
கடந்த 10…
தற்போது தமிழ்…
விஜயின் ஜனநாயகன்…