தீபிகா படுகோன் பின்னணியில் தாவூத் இப்ராஹிம்: பாஜக எம்பி அதிர்ச்சி தகவல்!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் ஜே.என்.யூ மாணவர்கள் சிலர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது
ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து பிரபல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஒருசில திரையுலகை சேர்ந்தவர்களும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் உள்பட பெரிய நடிகர்களே இதுகுறித்து வாயை திறக்காத நிலையில் நடிகை தீபிகா படுகோனே நேற்று மிகவும் தைரியமாக ஜே.என்.யூ பல்கலைக்கழகத்திற்குச் சென்று மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக அறிவித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது
இந்த நிலையில் ஜே.என்.யூ மாணவர்களுக்கு தீபிகா ஆதரவு கொடுத்தது கொடுத்தது குறித்து பாஜக ராஜ்யசபா எம்பி ராஜேஷ் சின்ஹா அவர்கள் கூறியபோது ’தீபிகா படுகோனே ஜே.என்.யூ பல்கலைக்கழகம் சென்றதன் பின்னணியில் தாவூத் இப்ராகிம் உள்ளார் என்று கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
எந்த ஆதாரத்தை வைத்து தீபிகா படுகோனேவுக்கும் தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு இருப்பதாக ராஜேஷ் சின்ஹா கூறியுள்ளார் என்பதை அவர் விளக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்