பாலா இயக்கத்தில் சினிமாவில் அறிமுகமாக வேண்டியவர் துருவ் விக்ரம். தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார் பாலா. ஆனால், படம் தயாரித்த விக்ரமிற்கு பிடிக்கவில்லை என்பதால் அப்படம் அப்படியே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஆதித்ய வர்மா என்ற பெயரில் இயக்குனர் சந்தீப் ரெட்டியால் மீண்டும் இயக்கப்பட்டு வெளியிடப்பட்டது. படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்றாலும் நடிகராக துருவ் அறியப்பட்டார்.
இந்நிலையில், இவரின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பரியேறும் பெருமாள் படம் மூலம் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த மாரி செல்வராஜ் இயக்குகிறார். பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் மாரி செல்வராஜ். இதனால் இவரின் மூன்றாவது படத்தின் பெரிதான எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கபடி வீராக துருவ் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அப்படம் முடிந்ததும் இதன் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நினைத்தது எல்லாம்…
தமிழ்ப்பட உலகில்…
Actor Rajini:…
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…