More

அந்த ஹீரோ கூட அப்படி நடிச்சீங்கல? அப்போ என் கூடவும்…  சமீரா ரெட்டிக்கு நடந்த கொடுமை!

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.

Advertising
Advertising

பிறகு திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். அதையடுத்து கடந்த வருடம் ஜூலை 12ம் தேதி நைரா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததில் இருந்தே வீட்டில் ஓய்வெடுத்து,  குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் சமீரா ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.

இந்நிலையில் தற்ப்போது சினிமா துறையில் தனக்கு நடந்த கொடுமைகளை குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், ” ஒரு படத்தில் நான் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டிருந்த போது திடீரென அதில் முத்த காட்சியை சேர்த்து என்னை அதில் நடிக்க சொன்னார்கள். ஆனால், என்னிடம் முன்னரே சொல்லவில்லை. எனவே நான் நடிக்க முடியாது என்று மறுத்ததால், இதற்கு முன்னர் முசாஃபிர் படத்தில் முத்த காட்சியில் நடித்தீர்களே அப்போ இதிலும் நடிக்கவேண்டும் என கூறி கட்டாயப்படுத்தி முத்த காட்சியை படம் பிடித்தனர். ஒரு முறை நான் நடித்துவிட்டேன் என்பதற்காக திரும்ப திரும்ப நடிப்பேன் என்று அர்த்தமில்லை என காட்டமாக தனது கருத்தினை பதிவு செய்தார்.

Published by
adminram

Recent Posts