More

குருபூஜையால் டாஸ்மாக்குக்கு லீவு… வாட்ஸ் ஆப் மூலம் டோர் டெலிவரி செய்த நபர்!

இன்று தேவர் குருபூஜையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து பிளாக்கில் சரக்கை விற்றுள்ளார் ஒரு நபர்.

Advertising
Advertising

தேவர் குருபூஜையை முன்னிட்டு தேவையில்லாத வன்முறைகளை தடுக்க மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இன்று அந்த மாவட்டங்களில் சரக்கை மொத்தமாக வாங்கி பிளாக்கில் விற்கும் போக்கு அதிகமாகியுள்ளது.

அதுபோல  மதுரை மாவட்டத்தில் தங்கராமன் என்பவர் ஒரு போன் பண்ணி தன் நம்பருக்கு பணத்தை அனுப்பிவிட்டால் வீடு தேடி வரும் சரக்கு என வாட்ஸ் ஆப் மூலமாக தகவலைப் பரப்பியுள்ளார். இது சம்மந்தமாக போலீஸாருக்கு தகவல் சொல்ல அவர்கள் மதுபானம் வாங்குபவர் போல வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பியுள்ளனர். தங்கராமன் சரக்கைக் கொடுக்க சென்ற போது அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்களையும் 14,000 மேற்பட்ட பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

Published by
adminram

Recent Posts