பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் இயக்குனர் ஜீ.மோகன் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் திரௌபதி. ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டதால் அப்பிரிவின் ஆதரவும், மற்றவர்கள் இப்படத்தை கடுமையாகவும் எதிர்த்தனர்.
குறிப்பாக, குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பெண்களை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த வாலிபர்கள் காதல் என்கிற பெயரில் ஏமாற்றி வாழ்க்கையை பாழ் செய்வதுவிடுகின்றனர் என்கிற கருத்து இப்படத்தில் கையாளப்பட்டுள்ளது. எனவே, சில சமூகத்தை சேர்ந்த பிரிவினர் இப்படத்தை ஆதரித்தும், சிலர் அதை எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்படம் இன்று காலை வெளியானது. குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் இப்படத்தை ஆஹோ ஓஹோ எனக் கூறிவந்தாலும், பொதுவான சினிமா ரசிகர்களை இப்படம் கவரவில்லை. இது சமூகவலைத்தளங்களில் எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஒரு வாலிபர் இப்படத்தை ஆதரிக்கும் வகையில் சேலை அணிந்து, கையில் அரிவாள் பிடித்து, பத்திரகாளி போல் வேடமணிந்து திரையரங்கிற்கு வந்திருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘ அசுரனோ, பரியேறும் பெருமாளோ வெளியான போது இப்படி எதுவும் நடக்கவில்லை. இப்போது கையில் அரிவாளுடன் ஒருவர் வந்திருக்கிறார் எனில் வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்’ எனக் கூறி வருகின்றனர்.
சூர்யாவின் கங்குவா…
பிரேமம் படத்தின்…
பொதுவாக ஒரு…
இளையராஜா கொடுத்த…
எம்.ஜி.ஆருக்கு சிவாஜி…