நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 15ம் தேதியில் இருந்து தொடங்கியது. ஹைதராபாத்தில் படத்தின் படப்பிடிப்பு நடக்க அனைவரும் அங்கு தகுந்த பாதுகாப்புடன் சென்றனர்.இந்த நிலையில் தான் கொரோனா படப்பிடிப்பில் 8 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சென்னை திரும்ப இருந்த ரஜினி ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என்று பார்த்தால் அவரது ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாகவே உள்ளதாம். இதனால் இன்று சில டெஸ்ட் எடுக்கப்படவுள்ளதாம். இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொலைப்பேசி வழியாக ரஜினியிடம் பேசி அவரது உடல் நிலை குறித்து விசாரித்தார். மேலும்,சீக்கிரம் உடல் நலம் பெற்று திரும்புமாறு வாழ்த்து தெரிவித்தார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஹைதராபாத், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரைப்பட நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்களை நான் இன்று (26.12.2020) தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தேன்.’ என முதல்வர் பதிவிட்டுள்ளார்.
முதல்வரின் இந்த செயல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
விஜய் ரசிகர்கள்…
Simbu: சிம்புவின்…
விஜய் டிவி…
பத்திரிக்கையாளராக இருந்து…
தமிழ் சினிமாவில்…