மகளை பலாத்காரம் செய்து எய்ட்ஸ் நோயை பரப்பிய தந்தை – நீதிமன்றம் தீர்ப்பு !

a6545e3f8466408b276868b8101a422e-2

மகளை பாலியல் வன்புணர்வு செய்து தனக்கிருந்த எய்ட்ஸ் நோயை அவருக்குப் பரப்பிய தந்தைக்கு நீதிமன்றம் 4 ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். மனைவியை இழந்த இவருக்கு பள்ளி செல்லும் மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் சோகமாகவும் வித்தியாசமாகவும் நடந்து கொண்ட அவரது மகளை ஆசிரியர்கள் தனியாக அழைத்து விசாரித்துள்ளனர்.

அப்போது ஆசிரியர்களிடம், தனது தந்தை ஒரு வருடமாக வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதை வெளியே சொன்னால் தன்னைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டுவதாகவும் கூறி அதிர்ச்சியளித்துள்ளார். உடனடியாக ஆசிரியர்கள் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் சொல்ல அவர்கள் சிறுமியின் தந்தை குமாரைக் கைது செய்தனர்.

காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை மோசமாக மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவருக்கு ஹெச் எய் வி நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தந்தைக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கும் எய்ட்ஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது சம்மந்தமான வழக்கில் குற்றவாளியான தந்தைக்கு 4 ஆயுள் தண்டனையும் கொலை மிரட்டல் விடுத்ததற்காக 6 மாதம் சிறை தண்டனையும் விதித்துள்ளது நீதிமன்றம்.

 

Related Articles

Next Story