More

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை – கடைசியில் நடந்த விபரீதம் !

மேட்டூர் அருகே பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரம் ஆவடத்தூரை சேர்ந்தவர் படவெட்டி. இவருக்கு நிலா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் நிலா தன் கணவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டுக்கு வெளியே இருந்த கட்டியில் தலையில் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து போலிஸார் வந்து நடத்திய விசாரணையில் படவெட்டி குடிபோதையில் தனது மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் அவர் கிரைண்டர் கல்லைக் கொண்டுவந்து அவர் தலையில் போட்டு கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts