கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்… விஷம் குடித்த காதல் ஜோடிகள் – பலியான ஒரு உயிர் !

f2b42a2ea392ff2991239cd353ae8fdd

விருதுநகர் மாவட்டத்தில் தன் விருப்பமின்றி தனக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோருக்கு எதிராக மகள் தன் காதலனோடு சேர்ந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கால பெருமாள்பட்டி எனும் ஊரில் வசிக்கும் முருகன் என்பவரின் மகள் ரஞ்சிதா. இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அங்கு படிக்கும் சக மாணவர் மனோஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஞ்சிதாவின் பெற்றோர் அவருக்கு வலுக்கட்டாயமாக உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனாலும் தனது காதலனை மறக்காத ரஞ்சிதா வீட்டை விட்டு தனியாக வெளியேறி தனது காதலனுடன் சேர்ந்து விஷம் அருந்தியுள்ளார். தோப்பு ஒன்றில் மயங்கிய நிலையில் கிடந்த அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது .ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை உயிரிழந்துள்ளார். மேலும் அவரது காதலர் மனோஜ் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Articles

Next Story