More

ரூ.15 கோடி சுருட்டிக்கொண்டு சுஷாந்த்தை விட்டு ஓடிய காதலி ரியா கைது?

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுஷாந்த் கடந்த ஒருவருட காலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கும் கிடைக்கும் பட வாய்ப்புகளை பெரிய நடிகர்கள் சேர்ந்து சதி செய்து அவரை நடிக்கவிடாமல் வாய்ப்புகளை பறித்துக்கொண்டனர். இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 7 படவாய்ப்புகளை இழந்த சுஷாந்த் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில் சுஷாந்தின் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நடிகை ரியா சக்ரவர்த்தி ரூபாய் ரூ15 கோடி சுஷாந்தை ஏமாற்றி வேறு ஒரு அக்கவுன்ட்டுக்கு மாற்றியுள்ளார். மேலும்,  ரியா ஒரு சில நபர்களுடன்  சேர்ந்து கொண்டு, தனது மகனுக்கு பொருளாதார ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் அழுத்தங்கள் கொடுத்து துன்புறுத்தியுள்ளார்.

சுஷாந்திற்கு மன அழுத்தமே இல்லை. மன அழுத்தத்தை ரியா உருவாக்கியுள்ளார்.  இந்த விவகாரத்தில் ரியாவேதான் மருத்துவர்களை ஏற்பாடு செய்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வைத்திருக்கிறார். எனவே அந்த மருத்துவர்களை விசாரிக்கவேண்டும். கடைசியாக ரியா சுஷாந்த்தை விட்டு செல்லும்போது சுஷாந்தின் க்ரெடிட் கார்டு, லேப்டாப், மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றுள்ளார். என அடுக்கடுக்கான பல திடுக்கிடும் குற்றங்களை முன்வைத்துள்ளார் சுஷாந்தின் தந்தை. இது அத்தனையும் நிரூபிக்கப்பட்டால் நடிகை ரியா விரைவில் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏற்கனவே சுஷாந்த் ரசிகர்கள்,  ரியா மீது கடும் கோபத்தில் இருந்து வந்த நிலையில் இந்த விவகாரம் இன்னும் அவரை மோசமான பெண்ணாக முத்திரை குத்தப்பட்டுவிட்டது.

Published by
adminram

Recent Posts