திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் இரு சிறுமிகளை பாட்டி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவருக்கு இரண்டு மகள்கள். காளியப்பன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதால் குழந்தைகள் இருவரும் பாட்டியின் கவனிப்பில் வளர்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமிகள் இருவரையும் 20,000 ரூபாய்க்கு பாட்டி விற்றுள்ளதாகவும், அந்த குழந்தைகள் இருவரும் இப்போது திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்வதாகவும் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் சிறுமிகளின் பாட்டி விஜயலக்ஷ்மி மற்றும் அவர்களை வாங்கிய சகுந்தலா, கனகம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் இருக்கும் குழந்தைகளை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அரண்மனை 3…
Director Sundar…
இளையராஜா இசையில்…
சினிமாவில் இரண்டு…
கமல் -…