இயக்குனர் கௌதம் மேனன் முதன் முதலாக ஒரு கிராமத்துக் கதையை எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவின் ஸ்டைலிஸ்ட் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் இதுவரை எடுத்த படங்களின் கதாநாயகர்கள் எல்லாம் நகர்ப்புறத்து உயர் நடுத்தர வர்க்க படித்த டிப் டாப் ஆசாமிகளின் கதைதான். இதுபற்றி பல விமர்சனங்கள் வந்தபோதும் அவர் எனக்கு தெரிந்த வாழ்க்கையை சினிமாவாக எடுக்கிறேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் அதிரடியாக இப்போது கிராமத்துக் காதல் கதை ஒன்றை கௌதம் மேனன் இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. இதுவரை நகரத்தையும் நகரத்துக் காதல் கதைகளை மட்டுமே காட்சிப்படுத்திய கௌதம் மேனனின் இந்த முடிவு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
உத்தமவில்லன் படத்திற்கான…
அரண்மனை 4…
விஜய் ரசிகர்கள்…
Simbu: சிம்புவின்…
விஜய் டிவி…