நடிகர் ரஜினிகாந்துக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என பெண்கள் வாக்கு சேகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவார் என எதிர்பார்த்த நிலையில் தன் உடல்நிலையைக் காரணம் காட்டி கட்சி ஆரம்பிக்காமல் நழுவி விடலாம் என நினைக்கிறார் போலும். இது சம்மந்தமாக கடந்த வாரம் சமூகவலைதளங்களில் பரவிய அறிக்கை ஒன்று ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என தமிழகமெங்கும் உள்ள அவர் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி அழைப்பு விடுக்கின்றனர்.
இந்நிலையில் நாகையில் பெண்கள் வரும் தேர்தலில் ரஜினிக்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்காத நிலையில் பெண்கள் இதுபோல வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது வினோதமாக பாரக்கப்பட்டது.
வெங்கட்பிரபு இயக்கத்தில்…
கமல், மணிரத்னம்…
Trisha: நடிகை…
ராமராஜனைப் பற்றியும்…
நாடகங்களை இயக்கி…