என்னை திருமணம் செய்துகொள்வதாக சொன்னார் – கர்ப்பமான மைனர் பெண்ணின் அதிரவைக்கும் வாக்குமூலம் !

4d176029a3a31d77fe6e1831c04e4941-1-2

திருப்பூரில் 14 வயது பெண் ஒருவரைக் கூலித்தொழிலாளி திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், உடுமலைப்பேட்டைக்கு அருகே உள்ள ஜல்லிப்பட்டியைச் சேர்ந்தவர் அந்த சிறுமி. இரு தினங்களுக்கு முன்னால் வயிற்று வலியால் அவதிப்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். 14 வயதே ஆன தங்கள் மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது சம்மந்தமாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சிறுமியிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது சிறுமி சொன்ன தகவல்கள் அதிர்ச்சியை அளித்துள்ளன. அதே பகுதியில் வசிக்கும் கதிரேசன் என்பவர் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக சொல்லி அவரைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி வழக்குப் பதிவு செய்த போலீஸார் கதிரேசனை தேடி வருகின்றனர்.

 

Related Articles

Next Story