More

மனைவி தூக்கு மாட்டிக் கொள்வது கூட தெரியாமல் போதையில் கிடந்த கணவன் – விழித்த போது அதிர்ச்சி முடிவு !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் மகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடந்துள்ளது. கணவன் மற்றும் மனைவி இருவரும் தனியாக வாழ்ந்ததை அடுத்து கணவரின் குடிப்பழக்கத்தால் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து இருவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது இருவரும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் சொல்லப்பட்டு நடந்த விசாரணையில் ‘நேற்று முன் தினம் மணிகண்டன் குடித்து விட்டு வர, அது சம்மந்தமாக இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. இதையடுத்து போதையில் மணிகண்டன மயங்கிவிட மகேஸ்வரி தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பின்னர் நள்ளிரவில் போதை தெளிந்து மணிகண்டன் விழித்துப் பார்த்து அதிர்ச்சியாகி, மனைவியைக் கீழே இறக்கி தானும் அந்த துப்பட்டாவில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம்’ எனப் போலிஸார் கண்டறிந்துள்ளனர்.

Published by
adminram

Recent Posts