எனக்கு இப்படி ஒரு மறுபிறவி தேவையில்லை - துடிக்கும் யாஷிகா ஆனந்த்

8fbeb09d22d46d9629605f28f1fa3c3b

விடிந்தால் பிறந்தநாள். 4.8.1999ல் தான் புதுடெல்லியில் பிறந்தார் யாஷிகா ஆனந்த்.

கவலையின் விளிம்பில் உள்ளார் யாஷிகா ஆனந்த். துரதிருஷ்;;டத்தின் அதிர்ஷ்டம் இவருக்கு என்று சொன்னால் அது மிகையில்லை. சமீபத்தில் இரவு பார்ட்டிக்கு நண்பர்களுடன் காரில் சென்றார் யாஷிகா. அப்போது நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கார் தடுப்புச்சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. சம்பவ இடத்திலேயே இவரது தோழி வள்ளிச்செட்டி பவானி மரணம் அடைந்தார். இருந்த போதிலும் இவர் தப்பிப்பிழைத்தது அதிசயமே. இவருடைய தோழி அப்போது சீட் பெல்ட் அணியவில்லை. யாஷிகாவுக்கு இடுப்பு, முதுகு, கை, கால் ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தப்பிப்பிழைத்த யாஷிகா, நான் என்னைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை தோழியின் உயிரைப் பறித்ததற்காக குறை சொல்வதா என்று தெரியவில்லை. நான் வாழ்வதற்கு குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன். பவானி என்னை மன்னித்துவிடு. நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் வாழ நேர்ந்துள்ளது. நான் ஒவ்வொரு நொடியும் நீ இல்லாதது குறித்து வருத்தப்படுகிறேன். பவானி, நீ என்னை எப்பொழுதும் மன்னிக்க மாட்டாய் என எனக்குத் தெரியும். உன் ஆத்மா சாந்தி அடையட்டும். நீ என்னிடம் திரும்ப வர வேண்டும் என கடவுளுடன் வேண்டிக்கொண்டிருக்கிறேன். உன் குடும்பத்தார் என்னை மன்னிப்பார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

621430ce38ce9260f27ceb939b1c2951

யாஷிகா ஆனந்த் ஜீவா நடிப்பில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்;. தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜோம்பிளி உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 மற்றும் தமிழ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.

புது டெல்லியில் 4.8.1999ல் பிறந்தார். இவர் பஞ்சாப் மாடல் அழகி. பாடம், மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, மஹத் ராகவேந்திரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவற்றில் மணியார் குடும்பத்தில் மட்டும் சிறப்புத் தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

c6c5f41835e4ae3055fd35b9786eeaba

தற்போது மோசமான கார் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் கூறுகையில், அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கிறேன். இன்னும் 5 மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. நாளெல்லாம் படுக்கையில் தான் இருக்கிறேன். அதில் இருந்தபடி தான் நான் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியும். என்னால் எந்தப்பக்கமும் திரும்ப முடியாது. இப்படி தான் பல நாட்களாக விறைப்பாக இருக்கிறேன். என் பின்பகுதி முழுவதும் காயம் அடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக முகத்தில் காயமில்லை. இது எனக்கு மறுபிறவி தான். ஆனால் இப்படி ஒரு மறுபிறவியை நான் கேட்கவில்லை.

உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நான் காயப்பட்டு இருக்கிறேன். கடவுள் என்னைத் தண்டித்துள்ளார். நான் இழந்தவற்றை விட இந்த தண்டனை பெரிய விஷயம் அல்ல என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

722423ba9d45143c725e007db95cf02d

யாஷிகா என்றால் பிரபலமானவர் என்று பொருள். ஆனால், இவர் இந்தளவு பிரபலமாவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. என்ன தான் இருந்தாலும் கடவுள் இவருடைய விஷயத்தில் கருணை காட்டி அவரை பழைய யாஷிகாவாக மாற்ற வேண்டும். அவர் மறுபிறவி எடுத்தது தன் வாழ்நாளில் எதை நிறைவேற்ற எடுத்தாரோ அதைக் கண்டிப்பாக நிறைவேற்றி முடிக்க வேண்டும். இவருடைய பிறந்தநாளையொட்டி இப்படி ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மீண்டு வந்த யாஷிகா மீண்டும் வலம் வர இறைவனை இவருடைய பிறந்தநாளில் வேண்டுவோம்.

Related Articles
Next Story
Share it