பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பின் திரைப்பட உலகில் போதை மருந்து புலங்குவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது. பாலிவுட்டில் போதை மருந்து பயன்படுத்தாத நடிகர்களே இல்லை என நடிகை கங்கனா ரனாவத் கூறி இந்த புகாரை துவங்கி வைத்தார்.
அதன்பின், இந்த விவகாரம் சூடு பிடிக்க கன்னட நடிகைகள் ராகினி திரிதேவி, நிக்கி கல்ராணி தங்கை என பலரும் சிக்கினர். இவர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், பாலிவுட் நடிகர் கிஷோர் அமன் ஷெட்டியை மங்களூர் போலீசார் விசாரணை செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கன்னட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி அனுஸ்ரீக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கும் சம்மன் அனுப்பி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அனுஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘போதை பொருள் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீசாரின் விசாரணையில் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துவிட்டேன். ஆனால், விசாரணைக்கு சென்றதாலேயே என்னை குற்றவாளி என கருதுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் என்னை தவறாக விமர்சிக்கிறார்கள். இதனால் என் குடும்பமே நிம்மதியை இழந்துவிட்டது. தயவு செய்து மன வேதனையை கொடுக்காதீர்கள்’ என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
இசைஞானி இளையராஜா…
Venkat Prabhu:…
செண்டிமெண்ட் எல்லா…
Vijay Sethupathi:…
Actor Karthick: …