பிக்பாஸ் நிகழ்ச்சியை பிடித்தவர்களுக்கு எல்லாம் ஓவியாவை பிடிக்காமல் இருக்காது. தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவருக்கு எக்கச்சக்க புகழ் கிடைத்தது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அவரின் ரசிகர்களாக மாறினார். அவருக்காக மொத்த போட்டியாளர்களையுமே வெறுத்தனர். முதன் முதலில் ரசிகர்களை ஆர்மியாக அறிவிக்கப்பட்டதும் இவருக்கு தான். கண்டிப்பாக இவர் தான் வெற்றியாளர் என எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்கொலைக்கு முயன்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, வெளிவந்தவருக்கு பெரிய பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு தான் விதி விளையாடியது. அம்மணி நடித்த அனைத்து படங்களுமே ஏடாக்கூட கேரக்டரிலேயே அமைந்தது. அதுவும் அவரின் 90 எம்.எல் படத்தை குடும்பத்தினருடன் பார்க்கவே முடியாத நிலை உருவாகியது. அப்படத்தில் ஓவியா புகைப்பிடித்து இருப்பார். ஒருவேளை கஷ்டப்பட்டு நடித்து இருப்பாரோ என்ற சந்தேகத்தில் அந்த காட்சியை எப்படி நடித்தீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து பேசி இருக்கும் ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே, எனக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால், அதுகுறித்த பிரச்சனைகள் குறித்து அறிந்தப்பின் அந்த பழக்கத்தை விட்டுவிட்டேன் என்று தடாலடியாக ஷாக் கொடுத்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில்…
இளன் இயக்கத்தில்…
தமிழ்த்திரை உலகில்…
இந்தியன் 2…
Kiara advani:…