இஸ்லாம் மதத்திற்கு மாறுவேன்: ராதாரவியின் பேச்சால் பரபரப்பு!

5d0437fa5f765ad2a157d4a81841b118

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை சீர் திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் குறிப்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணிகள் மற்றும் மிஸ்டுகால் சிஸ்டம் ஆகியவை நடைபெற்று வருகிறது

அந்த வகையில் இன்று சென்னையில் பாஜக சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பாஜக தலைவர்கள் மற்றும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதா ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்

இந்த பேரணியின் இறுதியில் ராதாரவி பேசியபோது குடியுரிமை சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது என்றும் அப்படி இருந்தால் அது என்ன பிரச்சினை என்பதை எதிர்க்கட்சிகள் தாராளமாக கூறலாம் என்றும் கூறினார். மேலும் அப்படி ஒருவேளை இஸ்லாமியருக்கு இந்த சட்டத்தால் பிரச்சனை ஏற்பட்டால் நான் இஸ்லாம் மதத்துக்கு மாறுவேன் என்றும் அவர் தெரிவித்தார்

அதேபோல் இலங்கை தமிழர்களை ஏற்போம், அவர்கள் வாழ்வதற்கு அனைத்து உதவிகளும் செய்வோம். ஆனால் அதே நேரத்தில் இலங்கை தமிழர்களை இந்தியராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ராதாரவி தெரிவித்தார். ராதாரவியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

Related Articles

Next Story